அன்பு நண்பர்களே வணக்கம்!

சிறிய இடைவெளியில் வந்து இதன் மூலமாக உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சியை தருகிறது! சிலபல காரணங்களால் செப்டம்பர் மாத இதழை கொண்டு வர முடியவில்லை! அதை ஈடுகட்டும் விதமாக இம்மாதம் இரண்டு இதழைக் கொண்டு வந்தாயிற்று! இரண்டு இதழை ஒரே நேரத்தில் கொண்டு வருவதும் பல விஷயங்களுக்கு சாதகமாகவும் உள்ளது. ஒரே கூரியரில் அனுப்புவதால், பேக்கிங் வேலையும் எளிதாக உள்ளது! செலவீனங்களும் கம்மியாகிறது! அதே போல, புத்தகம் வாங்குபவர்களுக்கும் ஒரே கூரியர் கட்டணத்திலும் முடிந்து விடுகிறது! இதனால்தான் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

இம்மாதம் வெளிவந்துள்ள மிருக மனிதர்கள் & மோசடி நகரம் இரண்டுமே புதிய கதைகள், புதிய களங்கள். சைஸ் மற்றும் விலை எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் வந்துள்ளது. சிஸ்கோ இந்த மாறுபட்ட சைஸ் அனைவருக்கும் பிடிக்குமென்றே நினைக்கிறேன்! இதைப்பற்றிய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதே போல் மிருக மனிதர்கள் கதைக்கும் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது! புத்தகம் எப்போ வருமென்று நிறைய நண்பர்கள் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தினந்தோறும் கேட்டு வந்தனர். ஒரு வழியாக புத்தகங்கள் வந்து. சந்தாவில் இணைந்துள்ள நண்பர்கள் பாதி பேருக்கு இன்று கூரியரில் அனுப்பி வைத்தாகி விட்டது! மீதம் உள்ளவர்களுக்கு நாளை அனுப்பி வைக்கப்படும்! எல்லா புத்தகங்களுக்குமே கூடுதல் கவனம் செலுத்திதான் ஒவ்வொரு புத்தகத்தையும் வெளியிட்டு வருகிறோம்! இம்மாதம் வெளிவந்துள்ள மிருக மனிதர்களுக்கும், மோசடி நகரத்திற்கும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்! இதன் ரிசல்ட்டுக்காக ஆவலுடன் காத்துள்ளோம்! அதேபோல் இன்று மதுரையில் புத்தக கண்காட்சி தொடங்குகிறது! இன்று நான் அங்கு இருந்திருக்க வேண்டும்! ஆனால், இன்று புத்தகம் வருவதாலும், தீபாவளி மலர் புத்தகத்தை தீபாவளிக்குள் கொண்டு வரவேண்டுமென்பதாலும் மதுரைக்கு செல்ல முடியவில்லை! அடுத்த வருடம் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கலந்து கொள்வோம்! தற்போது கலந்து கொண்டுள்ள அனைத்து புத்தக ஸ்டால் நண்பர்களுக்கும் விற்பனை சிறக்க வாழ்த்துகிறோம்! மீண்டும் தீபாவளி இதழில் சந்திப்போம்! நன்றி

அன்புடன்

அ.கலீல்   






 

Comments

  1. வாழ்த்துக்கள்🎉🎊👍

    ReplyDelete
  2. மிருக மனிதர்கள்..
    தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது..
    ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கதையும் வித்தியாசமாக இருக்கும் நண்பரே! தமிழ் காமிக்ஸில் இதுபோல் கதை வந்த மாதிரி தெரியவில்லை

      Delete
  3. பெரிய சைசில் மூன்று கதைகளைக் கொண்ட சிஸ்கோவே எனது விருப்பம்..
    பார்ப்போம் இந்த சைஸ் எப்படி இருக்கிறதென்று..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக இந்த சைஸையும் விரும்புவீர்கள்

      Delete
  4. சின்ன சைஸ்,சின்ன விலை வாங்குவதற்கு இலகுவாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக, அதை மனதில் வைத்துதான் கொண்டு வந்தது

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஈரோட்டில் டயபாலிக்!