நண்பர்களே வணக்கம் வகம் காமிக்ஸ் தொடங்குவதற்கு முன்பு, எந்த காமிக்ஸை போடுவதென்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, சட்டென நினைவுக்கு வந்தது உள்ளூர் காமிக்ஸ் மட்டும்தான், ஏனெனில், அயல்நாட்டு கதைகள் எல்லாம் ராயல்டி (லைசன்ஸ்) அதிகமென்பதால், உள்ளூர் காமிக்ஸ்களையே போடுவதென்று முடிவெடுத்து முதலில் அணுகியது அமர் சித்திரக்கதை நிறுவனத்தை! அவர்கள் போட்ட கண்டிஷன் ஒத்து வராததால், அடுத்து பைகோ நிறுவனத்தை கேட்டு பார்த்தேன். அவர்களே தமிழில் போடுவதாக சொல்லியதால், அதையும் மறந்து விட்டு, அடுத்து நண்பர் ஒருவர் சொன்னதால் யாளி ட்ரீம்ஸ் கதைகளை கேட்டு இருந்தோம். ஒப்பந்தம் முடிவாகும் தருணத்தில், திடீரென வெறொரு கம்பெனிக்கு கைமாறி விட்டது! அடடா இதுவும் போச்சான்னு விரக்தியில் இருக்கும் போது தான் நம்ம கார்மோடி கிடைத்தார். உடனே அவரை பேசி முடித்து விட்டு மளமளவென வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, சிஸ்கோவும், பிரிட்டிஷ் கதைகளும் கிடைத்தன. ஆஹா ஒவ்வொரு கதைகளாக ஒவ்வொரு மாதம் போட்டு வந்தாலும் ஒரு இரண்டு வருடத்திற்கு வண்டி ஓட கதைகள் உள்ளன என்று பெருமிதம் கொண்டிருந்தேன். அதன் பிறகு நிறைய கதைகள் கிடைத்து கொண்டிருக்க, இரண்டு, ...
Popular posts from this blog
சிஸ்கோ கிட் ஸ்பெஷல்
அன்புடையீர் வணக்கம் வகம் காமிக்ஸ் வெளியிட முடிவு செய்ததுமே முதலில் முடிவானவர் கேனான் பால் கார் மோடி தான்! அதன், பிறகு இரண்டாவதாக முடிவானவர் வன்மேற் கின் நமது அபிமான நாயகரான சிஸ்கோகிட் தான்! கார்மோடி புத்தகம் வெளிவந்த பிறகு, கதை, மொழிபெயர்ப்பு, மேக்கிங் என எல்லாவற்றிலுமே சிறப்பான பெயர் பெற்றிருந்தாலும், விற்பனையில் சற்று மந்த நிலையாகவே சென்றதால், சற்று ஏமாற்றத்துடனே சிஸ்கோவின் பணியை தொடங்கப்பட்டது! முதலில், ஏற்கனவே வெளிவந்த கதை ஒன்று , இதுவரை வெளியிடப்படாத இரண்டு கதைகள் என தேர்வு செய்து, அதனை மூன்று நண்பர்களுக்கு மொழிபெயர்க்க அனுப்பப்பட்டது! மொழிபெயர்ப்புக்கு அனுப்பிவிட்டு இந்த கதைக்கான முன் அட்டைப்படத்திற்கு எதை போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஏதேதோ சிஸ்கோ அட்டைகளை ஆன்லைனில் தேடிப் பார்த்தும் எதுவும் தோதாக சிக்கவில்லை! சிஸ்கோவிற்காக காப்பி ரைட்ஸ் வாங்கியவரும் கதைத் தொடருக்கா...
ஈரோட்டில் டயபாலிக்!
சென்ற வருடம் ஜூலையில் துவங்கிய நமது காமிக்ஸ் பயணம், ஒரு வருடம் கடந்து சென்று கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம் என்றுதான் சொல்லுவேன்! புத்தக வாசிப்பாளர்கள் குறைந்திருக்கும் நிலையில், அதுவும் சித்திரக்கதை வாசிப்பாளர்கள் என்பது மிகச்சிறிய வட்டம் கொண்டது! அப்படி இருந்தும் எப்படியோ தட்டுத்தடுமாறி புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே! அதுவும் ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நமக்கொரு தனிஸ்டால் கிடைத்தது, மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் கருதுகிறேன். புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பதால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டாலும், என்ன ஆனாலும் பரவாயில்லை, எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள இதுவொரு வாய்ப்பாகவே கருதினேன். அங்கு இருந்த பனிரெண்டு நாட்களும் ஏதோ ஒரு புதிய உலகத்தில் வசித்தது போல் இருந்தது! (அதையெல்லாம் சொல்லணும்னா ஒரு புத்தகமே எழுதலாம் போல) நம் புத்தகங்கள் வாங்குவதற்கும், நம்மை சந்திப்பதற்கும் கேரளா, கோயமுத்தூர், பெங்களூர், மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர், ஓசூர், இன்னும் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். புத்தக ...
Comments
Post a Comment